ஆசிரியர்:- திரு மீரா செல்வகுமார்
காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
கைபேசி:- 8903279618
பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி, கருக்கொலையோ சிசுக்கொலையோ செய்யும் தமிழ்ச் சமூகத்தில், ‘அந்திவானின் செவ்வொளிக் கீற்று,’ என்றும், சிறு சிரிப்பில், உயிர் ஒளித்து வைக்கும் தேவதையென்றும்,
நூல்முழுக்க மகளின் புகழ் பாடும், இது போன்றதொரு
கவிதைத் தொகுப்பு, ஏற்கெனவே
தமிழில் வெளியாகியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில்,
நான் படித்த கவிதை நூல்கள் மிகச்சிலவே.
தந்தைக்கு மகள் மீதான அபரிமித பாசம், பல கவிதைகளில் உணர்ச்சிப் பிரவாகமாக, அடிமனதின் ஆழத்திலிருந்து,
ஊற்றெடுத்துப் பொங்கிப் பாய்கின்றது.